13ஆம் திருத்தத்தை இலங்கை உறுதி செய்யும்: மோடி எதிர்ப்பார்ப்பு
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களுக்கு கண்ணியமும் மரியாதையும் கொண்ட வாழ்க்கையை இலங்கை உறுதி செய்யும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அழைப்பு அதிதியான இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே அதிக தொடர்பை உறுதிப்படுத்தும் பல உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் 200 வருடங்களை பூர்த்தி செய்துள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான மேம்பாட்டு உதவிப் பொதியை அறிவித்துள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் பற்றிய பிரச்சினைகள் பேசப்பட்டன. தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என நம்பிக்கையை இந்தியா கொண்டுள்ளது.
சமத்துவம் நீதி மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பு மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்று இந்தியா எதிர்பார்கிறது.
75 கோடி ரூபாய் மதிப்பீட்டை அறிவித்த மோடி
அத்துடன் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மாகாணத் தேர்தல்களை நடத்துவதற்கும் இலங்கை தனது உறுதிமொழியை நிறைவேற்றும் என நம்புவதாக பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க இருவரும் கால்நடை வளர்ப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கிழக்கு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இரு தரப்புக்கும் இடையே இணையக்கட்டணச் சேவைகள் தொடர்பான ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
இதன்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக 75 கோடி ரூபாய் மதிப்பீட்டை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இலங்கை- இந்திய பாதுகாப்பும் வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.
எனவே பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் தேவைகளை உணர்ந்து ஒன்றாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தையும்இ வட இலங்கையின் காங்கேசன்துறையையும் இணைக்கும் வகையில் பயணிகள் படகுச் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் மோடி அறிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை
கடற்றொழிலாளர்கள் பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் விவாதித்ததாக குறித்த மோடி இந்த விவகாரத்தை 'மனிதாபிமான கண்ணோட்டத்தில்' பார்க்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
இந்தநிலையில் தமது கருத்தை வெளியிட்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇ அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் 'ஒருமித்த கருத்தை' நோக்கிச் செயல்பட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை பொருளாதார வளர்ச்சி பாதையில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நவீன வரலாற்றில் மிகவும் சவாலான காலகட்டம்' என்று கடந்த ஆண்டை வர்ணித்த இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
