இருளில் மூழ்கிய மிஹிந்தலை - தீபந்தங்களுடன் களமிறங்கிய சுற்றுலா பயணிகள்
பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் குழுவொன்று நேற்று முன்தினம் இரவு மிஹிந்தலை விகாரையை சென்றடைந்துள்ளனர்.
மிஹிந்தலை புனித தலத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அறியாமல் நேற்றிரவு முன்தினம் மிஹிந்தலை வழிபட சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர்.
பிரான்ஸ் பிரஜைகள் உட்பட சுமார் 50 பேர் கொண்ட வெளிநாட்டினர் தீப்பந்தங்களுடன் மிஹிந்தலை மலையில் ஏறியுள்ளனர்.
மிஹிந்தலை விகாரை
41 இலட்சம் மின்கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் மிஹிந்தலை விகாரையின் மின்சாரத்தை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளது.
விகாரையை அதனை அண்மித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் சுற்றுலாப் பயணிகள் மிஹிந்தலை தீபங்களை ஏற்றிக்கொண்டு கடக்க வேண்டியிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
சஜித் பிரேமதாஸ
இந்த நிலையில் மிஹிந்தலை விகாரையின் மின் பட்டியலை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam
