இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Hambantota Sri Lanka China India
By Sivaa Mayuri Aug 03, 2022 09:02 AM GMT
Report

தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லும் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல், இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆசிய பசுபிக் பிராந்திய ஆய்வுக்கான அமெரிக்க சஞ்சிகையான தெ டிப்ளொமெட் இதனை குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் சீனக் கப்பலை நிறுத்துவது தொடர்பாக இந்திய அச்சத்தை போக்க இலங்கை நேற்று செவ்வாயன்று முயன்றது.

இது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறது, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறினார். இது புது டில்லியில் சலசலப்பான இறகுகளை மென்மையாக்க வாய்ப்பில்லை என்ற தெ டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

எச்சரிக்கும் இந்திய ஆய்வாளர்கள்..

கடந்த தசாப்தத்தில் இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்து வருவது இந்தியாவிற்கு கவலையளிக்கும் விடயமாகும். இலங்கைத் தலைவர்கள் மீதான சீனாவின் செல்வாக்கு மற்றும் பொருளாதாரத்தின் மீதான அதன் பிடிப்பு இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளும் என இந்திய ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka To Warn That Relations

2018 ஆம் ஆண்டில், கட்டப்படாத கடனுக்குப் பதிலாக, சீனாவால் கட்டப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பீய்ஜிங்கிடம் இலங்கை ஒப்படைத்தது. இது சீனர்கள் துறைமுகத்தை இராணுவப் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என புதுடில்லிக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தியது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனா, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை என்று இலங்கை, இந்தியாவுக்கு உறுதியளித்த போதிலும், குறிப்பாக சீனா தொடர்பான இந்திய பாதுகாப்பு அச்சங்களுக்கு கொழும்பு எப்போதும் உணர்திறன் காட்டாததால் இந்திய அச்சங்கள் நீடித்தன.

உதாரணமாக, 2014 இல், இந்தியாவின் எதிர்ப்பைப் புறக்கணித்து கொழும்பு துறைமுகத்தில் சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலையும் போர்க்கப்பலையும் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதித்தது. எனினும் கடந்த இரண்டு வருடங்களாக, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை பின்னுக்குத் தள்ள இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன.

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு கடன் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் புதுடில்லி முன்னணியில் உள்ளது. இதன் மூலம்  சீன சார்பு ராஜபக்சர்கள்  ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அத்துடன் இலங்கை தீவில் இழந்த செல்வாக்கை இந்தியா மீட்டெடுத்தது.

கடந்த சில மாதங்களாக இந்தியா, இலங்கையில் சில பொதுமக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும், இலங்கையின் முடிவெடுப்பவர்கள் இன்னும்  சீனாவின் பிடியில் இருப்பதை காண முடிகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்று வரும்போது, யார் எந்த நோக்கத்திற்காக விஜயம் செய்கிறார்கள் என்பது குறித்து இலங்கைக்கு சிறிதும் கருத்து இல்லை என்பதை அறிந்துக்கொள்ளமுடிகிறது.

இந்தநிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஹம்பாந்தோட்டைக்கு இரட்டை நோக்கம் கொண்ட கப்பலை அனுப்புவதன் மூலம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தனது கட்டுப்பாடு வலுவாக உள்ளது என்ற செய்தியை சீனா தெரிவித்துள்ளது.

2014 இல் கொழும்பில் சீன கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப்பட்டமையானது, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு சிதைவை ஏற்படுத்தியது, அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இதேவேளை வரவிருக்கும் சீனாவின் கப்பல் தொடர்பில் இந்தியாவின் பதில் கடுமையாக இருக்காது.

ஆனால் அது எதிர்வரும் மாதங்களில் கொழும்புக்கான புதுடில்லியின் ஆதரவை அது பாதிக்கும் என்று தெ டிப்ளொட்மெட் குறிப்பிட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US