தொடர் சர்ச்சையில் சிக்கியுள்ள சில பௌத்த தேரர்கள்! மௌனம் காக்கும் சரத் வீரசேகர (Video)
வடக்கு கிழக்கில் பௌத்தத்தின் இருப்புக்கு எதிராக நகர்த்தப்படும் வியூகங்கள் குறித்த உண்மைகளை தெற்கில் உள்ள மக்களுக்கு அம்பலப்படுத்த கடமைப்பட்டுள்ளதாக மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
அண்மைக்காலமாக சிங்கள - தமிழ் மக்களுக்கிடையிலான கடும்போக்கு கருத்துக்களை வெளிப்படுத்திவரும் அவர், முல்லைத்தீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்திருந்தார்.
இருப்பினும் காலம் காலமாக பௌத்தத்தின் இருப்பை முழுமூச்சாக பேசும் சரத் வீரசேகர அண்மையில் பௌத்த துறவிகளால் சிதைவடையும் பௌத்த மதத்தின் தலைகீழ் தன்மை குறித்து மௌனம் காத்து வருகிறார்.
சிங்கள மக்களின் இருப்பை காக்க வேண்டும் என்றால் அவர் முதலில் இவ்வாறான பௌத்த துறவிகளின் செயற்பாடுகள் குறித்தும் கருத்துரைக்க வேண்டும்.
அதன் பின்னரே அவர் கூறுவது போன்று வடக்கு கிழக்கில் பௌத்தத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது சிறந்த விடயமாக காணப்படும்.
அண்மையில் ஜப்பானிலும், இரு தினங்களுக்கு முன்னர் விகாரை ஒன்றிலும் பாலியல் சர்ச்சையில் சிக்கிய பௌத்த தேரர்களையும், மட்டக்களப்பில் பொலிஸாரை தாக்கிய தேரரையும் சுட்டிக்காட்டி பௌத்தத்தின் நிலைப்பாடுகளை வெளியிட்டால் அதுவே உண்மையான தலைமைத்துவமாக காணப்படும்.
இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் விடயங்களை இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சியில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
