தென் பகுதியில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை
தெனியாய – மொறவக்க பகுதியில் வாழும் மலையக தமிழர்கள், தமது வாழ்வாதாரத்திற்காக வளர்த்த வாழை மரங்களை, சில குண்டர்கள் வெட்டி வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல நூற்றாண்டு காலமாக இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மலையக தமிழர்கள், வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளை அண்மித்த பகுதிகளில் வாழை மரங்களை நட்டு, அதனூடாக வருமானத்தை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
பயிர்செய்கை அழிப்பு
இவ்வாறான பின்னணியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாழை குலைகளை விற்பனை செய்ய முயற்சித்த தருணத்தில், அது தமக்கு சொந்தமானது என தோட்ட நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சிலர் குறித்த பகுதிக்கு வருகை தந்து, அங்கு வளர்ந்திருந்த அனைத்து மரங்களையும் வெட்டி வீசியுள்ளனர்.
வாழைமரங்கள் மாத்திரமன்றி, ஏனைய செய்கைகளையும் வெட்டியுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் வாழைமரங்களை வெட்டி வீசும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பொலிஸாரின் கவனயீனம்
இதேவேளை மொறவக்க பெருந்தோட்ட பகுதியானது, தற்போது பௌத்த பிக்கு ஒருவரின் கட்டுப்பாட்டில் செயற்பட்டு வருவதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எந்தவொரு செய்கையையும் இந்த பகுதியில் செய்யக்கூடாது என தமக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், தமக்கான நியாயத்தை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், பொலிஸார் இன்று வரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
