தென்கொரியாவில் இருந்து 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ள இலங்கை
தென்கொரியாவில் இருந்து இலங்கை 500 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
இதற்கான உடன்படிக்கை இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் நிதியமைச்சுக்கும், தென்கொரியாவின் எக்ஸிம் வங்கிக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கையின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிக்கலயும் தென்கொரிய எக்ஸிம் வங்கியின் சார்பில் கொரியாவுக்கு இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
2020 - 2022ஆம் ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன் நிதி 40 வருடங்களில் மீளச்செலுத்தப்படும் வகையில் 10 வருட
அவகாசத்துடன் 0.15 வட்டிவீதத்தில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri