சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - நாமல், ஜோன்ஸ்டனுக்கு முக்கிய அமைச்சு பதவி
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல மூத்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக கொழும்பு அரசியல் பரபரப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 11 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam