சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - நாமல், ஜோன்ஸ்டனுக்கு முக்கிய அமைச்சு பதவி
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல மூத்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக கொழும்பு அரசியல் பரபரப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam