கையொப்பமிட மறுத்த ரணில்: அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு

Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Magistrate Court Sri Lankan political crisis
By Chandramathi Aug 31, 2022 12:08 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு 2019ஆம் ஆண்டு தீர்மானித்திருந்தார்.

கையொப்பமிட ஜனாதிபதி மறுப்பு

கையொப்பமிட மறுத்த ரணில்: அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு | Sri Lanka Political Crisis President Ranil

அந்த தீர்மானத்தை இரத்து செயய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள், நீதியரசர்களான விஜித் மல்லல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், இன்று (31)பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணிலின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தீர்க்கமான முடிவு

கையொப்பமிட மறுத்த ரணில்: அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு | Sri Lanka Political Crisis President Ranil

இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரால், ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திடப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் போது தனது தீர்மானத்தை அறிவிக்குமாறு, சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதில்லை என அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அந்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, மன்றுக்கு அறிவித்துள்ளார்.

கையொப்பமிட மறுத்த ரணில்: அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள தீர்க்கமான முடிவு | Sri Lanka Political Crisis President Ranil

இதனையடுத்து நீதியரசர் விஜித் மலல்கொட, மனுக்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்பது குறித்து அடுத்த அமர்வில் அறிவிக்குமாறு மனுதாரர்களுக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை பெப்ரவரி 23ஆம் திகதி மனு மீதான பரிசீலனையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US