பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர் முன்மொழிவு! இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பம் (Live)
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
புதிய இணைப்பு
பிரதி சபாநாயகரின் தெரிவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று தீவிர நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அந்த நிலையில் இருந்து விலகியைதை அடுத்து, பிரதி சபாநாயகருக்கான தெரிவை சபாநாயகர் கோரினார்.
இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி கவிரட்னவை பிரதி சபாநாயகராக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
இதனையடுத்து ஆளும் கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் முன்மொழியப்பட்டது.
இந்தநிலையில் வாக்கெடுப்பை நடத்துமாறு கோரப்பட்டது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஆளும் கட்சியில் இருந்து விலகிய விமல் வீரவன்ச உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
நாடு இருக்கும் நிலையில் பிரதமரும் எதிர்கட்சி தலைவரும் இணைந்து இதில் தீர்மானம் ஒன்றை எட்டவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை மீறி வாக்கெடுப்பு நடத்தப்படுமானால், தமது உறுப்பினர்கள் வாக்குகளை நிராகரிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தனர்.
இதனையடுத்து முன்மொழியப்பட்டவர்களில் இருவரில் ஒருவர் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள சபாநாயகர் அவகாசத்தை வழங்கினார்.
எனினும் இதற்கு இரண்டு தரப்பிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதன் காரணமாக வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அதன்படி தற்சமயம் இரகசிய வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
ஆனால், இதுவரை பிரதி சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. இவற்றை தொடர்ந்து தற்சமயம் இரகசிய வாக்கெடுப்பும் ஆரம்பமாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் அமர்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் நடைபெறும் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இதுவாகும்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US