தவறு செய்தால் மன்னிப்பு கேட்பேன் - அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
நான் தவறு செய்தால் மன்னிப்பு கேட்டு அதனை திருத்தி செய்வதே எனது வழமையான செயற்பாடு என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளாஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சட்டவிரோத அட்டைப் பண்ணைகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1990 ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நான் எனது அரசியல் செயற்பாடுகளை மக்கள் நலன் சார்ந்தே இன்று வரை செய்து வருகின்றேன்.

15 வருட கால ஆயுதப்போராட்டம்
15 வருட கால ஆயுதப் போராட்டமும் 30 வருட கால தேசிய அரசியலின் அனுபவம் எனக்கு நிறைய இருக்கின்றது. அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல் செய்யும் அரசியல்வாதி நான் அல்ல.
மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு பலவற்றை நிறைவேற்றியுள்ளதோடு இன்னும் நிறைவேற்றுவேன். அட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகின்றார்களோ அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகின்றார்களோ என எனக்குத் தெரியாது.
வடக்கில் 5000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்த ஏற்கனவே திட்டங்கள் உள்ள நிலையில் 1150 ஏக்கரில் அட்டைப்பண்ணைகள் செயற்படுத்தப்படுகின்றது.

நான் அமைச்சராக வர முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும், யாழ்.மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் செயற்படுத்தப்பட்டது.
நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும்163 பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது.
யாழ்.மாவட்டத்தில் 245 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது.
பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணை
பருத்தித்தீவு கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். இதை யாரும் அப்போது அரசியல் ஆக்காத நிலையில் தற்போது சீன இராணுவம் வந்திருப்பதாகக் கூறுகின்றார்கள்.
பருத்தித்தீவு அட்டைப் பண்ணை தழுவல் அடிப்படையில் அதற்கான அனுமதிகள் கிடைக்கும் நிலையில் ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது.
ஆகவே என்னை பொறுத்தவரையில் இந்தியாவா சீனாவா என வினா எழுப்பப்படுமானால்
இந்தியாவே என கூறிக் கொள்வதோடு கடல் சார்ந்து மக்களுக்கான அபிவிருத்தி
திட்டங்கள் விரைவாகவும் வினைதிறனாகவும் செயல்படுத்தப்படும் என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 14 மணி நேரம் முன்
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan