மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கிக் கலாசாரம்: ஒருவர் சுட்டுக் கொலை-செய்திகளி்ன் தொகுப்பு
அஹுங்கல்ல- போகஹபிட்டிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போகஹபிட்டிய, ஊரகஹா வீதியில் நேற்றிரவு முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதன்போது அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றைய நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தொடர்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 5 வெற்றுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளி்ன் தொகுப்பு,


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க Cineulagam

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

அடுத்தவர் வாழ்வை நாசமாக்க.... சிம்புவுடனான உறவு பற்றி திருமண வீடியோவில் மனம் திறந்த ஹன்சிகா News Lankasri
