ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு

அத்துடன் வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் நாட்களில் அனைத்து நாடாளுமன்ற பிரநிதிகளும் நாடாளுமன்றதத்தில் இருப்பது ஜனாதிபதியால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கி அர்ப்பணிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்களின் செயல்

நாடாளுமன்றத்தில் கேள்வியொன்று எழுப்பப்படும் சந்தர்ப்பத்திற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளிக்க இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri