கடந்த 5 மாதங்களில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவு
இந்த ஆண்டு கடந்த 5 மாதங்களில் 27 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 12 நாட்களில் மாத்திரம் 10 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பொதுவாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களின் பின்னணி
அண்மையில் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, ஹபராதுவ உள்ளிட்ட தென் பகுதிகளில் பத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அஹுங்கல்லே லொகு பாத்துவின் பாதாள உலகக் குழுவும் கொஸ்கொட சுஜீ தலைமையிலான பாதாள உலகக் குழுவும் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.