இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி : வெளியான அறிவிப்பு
2028 அல்லது 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரியவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி
எதிர்காலத்தில் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடி ஏற்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள், “ஆம் நிச்சயமாக ஏற்படும். எங்களது கணக்கீடுகளின்படி, 2028 - 2030இற்குள் நாடு மீண்டும் ஓய்வூதியம் வழங்குவதில் நெருக்கடியை சந்திக்கும்.
ஏற்கனவே 7 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர். அவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் செலுத்த சுமார் 27 பில்லியன் தேவைப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri
