யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட குழப்பம்: வீட்டிற்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தீ வைப்பு
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினரும், சம்பவம் நடக்கும் போது அவ்விடத்தில் நின்ற நிலையில், அவரின் வீட்டிற்கும் இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவத்தினை அடுத்து இரு இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எரிபொருள் பிரச்சினை தொடர்பில் மறைக்கப்படும் உண்மைகள் - வாசுதேவ நாணயக்கார |