மத்திய வங்கியின் கையிருப்பில் உள்ள வெளிநாட்டு ஒதுக்கம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் செலவிடக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கத்தின் பெறுமதி 300 மில்லியன் (0.3 பில்லியன்) அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.7 பில்லியன் டொலர்

அறிக்கையின்படி, 2022 ஒக்டோபர் இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு நாணய ஒதுக்கம் 1.7 பில்லியன் டொலர்களாக இருந்தது.
இதில், சீன மக்கள் வங்கி நாணய இடமாற்ற வசதிக்காக வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் அடங்குகின்றன.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சி

இந்தநிலையில், சுற்றுலாத்துறையின் வளர்ச்சி வெளிநாட்டு ஒதுக்கத்தில் நன்மையை ஏற்படுத்தும் என மத்திய வங்கி எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, பணம் அச்சிடலில் படிப்படியாக குறைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு 341 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டது.
எனினும், கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் 47 பில்லியன் ரூபாய் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கு மத்தியில், இறக்குமதிக்கான தேவையை குறைக்க எடுக்கப்பட்ட கொள்கை நடவடிக்கைகளின் காரணமாக, வலுவான ஏற்றுமதி வருவாய் மற்றும் இறக்குமதி செலவினங்களில் கணிசமான சரிவு காரணமாக, அக்டோபர் 2022 உடன் முடிவடைந்த பத்து மாதங்களுக்கான வர்த்தகப் பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி
எதிர்வரும் காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காகப் புறப்படுவோர் அதிகரிப்புடன் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,
இதற்கிடையில், உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 23 நவம்பர் 2022 அன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், நிலையான வைப்பு வசதி விகிதத்தையும் (SDFR) நிலைப்பாட்டையும் பராமரிக்க முடிவு செய்தது. மத்திய வங்கியின் கடன் வசதி விகிதம் (SLFR) முறையே 14.50 சதவீதம் மற்றும் 15.50 சதவீதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan