வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் அமுலாகவுள்ள இறுக்கமான சட்டம்
வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் தற்போதுள்ள சட்டங்களை நீக்கி, புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும். எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் செயற்பாடுகளால் நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாது எனவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan