இத்தாலியில் பயன்படுத்தப்படவுள்ள இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம்! தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகும் என்ற சமீபத்திய செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.
இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் அங்கீகரிப்பது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முரண்பாடானவை என்றும் தூதரகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
உடன்படிக்கை
மேலும், இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான சாரதி அனுமதிப்பத்திரங்களை அங்கீகரிப்பதற்கான உடன்படிக்கை நடைமுறையில் உள்ளதாகவும் ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டவுடன் இத்தாலியில் உள்ள இலங்கை சமூகத்திற்கு முறையாக அறிவிக்கப்படும் என தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
