அனர்த்தம் குறித்து அறிவிக்க வேண்டிய இலக்கங்கள்
நாட்டில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பொதுமக்கள் பலர் அசொளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
அதன்படி, தொடர் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் தங்களது உடைமைகளை இழந்து, பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனர்த்த நிலைமைகளின் போது தங்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் அவசர தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, நுவரெலியா, வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் தங்களுடைய மாவட்டத்திற்கான கீழ்காணும் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் ஊடாக அனர்த்த பாதிப்புக்களை அறியப்படுத்த முடியும்.