வங்குரோத்து நிலையை அடைந்துள்ள இலங்கை - அமெரிக்க பொருளாதார நிபுணர் எச்சரிக்கை
இலங்கையில் உயர் பணவீக்கத்தினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கே தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான ஹென்கே இலங்கை ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அறிவிக்கப்பட்ட ஆண்டு பணவீக்கம் 21.5 சதவீதம் என்ற போதிலும், அவரது அளவீடுகளின்படி உண்மையான பணவீக்கம் 132 சதவீதம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்மைய, அதிகாரப்பூர்வ பணவீக்க விகிதத்தை விட உண்மையான பணவீக்க விகிதம் 6 மடங்கு அதிகமாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய உயர் பணவீக்கம் ஒரு பொருளாதாரப் பேரழிவு. இதனால் பணக்காரர்களை விட ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவதுதான் இங்கு உண்மையான பிரச்சினை என பேராசிரியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இறுதியில் அரசியல் பிரச்சினையே உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய நிலவரப்படி நாடு வங்குரோந்து நிலையை அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. அடுத்து வரும் நாட்கள் மிகவும் மோசமானதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan