சன நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டாம்! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அளவுக்கு அதில் உண்மையில்லை என்பதுடன், தொற்றாளர் இனம் காணப்பட்டாலும், அது எச்சரிக்கையான நிலை என்று தெரிவிக்க முடியாது. என்றாலும், கோவிட்-19 தொற்று இன்னும் முழுமையாக உலகிலிருந்து நீங்கவில்லை என்பதால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருவதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையிலா்,
கோவிட்-19 தொற்று, 2019 வருட இறுதியில் உலகளாவிய ரீதியில் பரவிய தொற்றுநோயாகக் காணப்பட்டது. எனினும், இது இன்னும் முற்றாக உலகிலிருந்து இல்லாமல் போகவில்லை.
இந்நிலையில், நாடு என்ற வகையில் கோவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து, இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். 2021 ஆரம்பத்தில் எமது நாட்டில் நாளாந்தம் 6 ஆயிரம் பேர்வரை தொற்றுக்குள்ளாகி வந்தனர். என்றாலும், வருட இறுதியாகிய போது அதனை 5 பேர் வரை குறைக்க முடிந்தது.
முகக்கவசம் அணியுங்கள்
2022 பெப்ரவரியில் நாளாந்தம் 20 பேர் வரையே தொற்றுக்குள்ளாகி வந்தனர். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதால், அதனை எமக்கு கட்டுப்படுத்த முடிந்தது.
அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் 70 சதவீதமானவர்கள் கோவிட்-19க்கான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டதால், மரணங்களை எமக்கு குறைக்க முடிந்தது. தற்போது வாரத்துக்கு 2 அல்லது 3 கோவிட்-19 மரணங்கள் இடம்பெறும் நிலையே இருக்கிறது.
உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது, கொவிட்-19 எச்சரிக்கை இன்னும் முற்றாக நீங்கவில்லை. என்றாலும், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, கோவிட்-19 தொற்றாளர்களை இனம் காண்பது முற்றாக நீங்கவில்லை. எமது நாட்டிலும் ஒரு சில மாதங்களில் காலநிலை மாற்றத்துக்கேற்ப தொற்றாளர்கள் இனம் காணும் எண்ணிக்கை கூடும் குறையும் வகையில் இருக்கிறது.
கடந்த 2 வாரங்களில் 6,7 பேர்வரை தொற்றாளர்கள் இனம் காணப்பட்டனர். என்றாலும், இது ஆபத்தான நிலை எனத் தெரிவிக்க முடியாது. மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இக்காலப்பகுதியில் இருமல், தடிமன் அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்காக, கோவிட்-19 என தீர்மானிக்க முடியாது.
சமூக பொறுப்பு என்ற வகையில் இவ்வாறான நோயுடையவர்கள் முகக்கவசம் அணிவதையும் சன நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், கோவிட்-19 மரணம் கடந்த 2 வாரங்களில் அதிகரித்திருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு எதுவும் இல்லை. சாதாரணமாக வேறு நோய்களுக்குள்ளாகி அவர்களுக்கு கோவிட்-19 நிலையும் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மரணங்களே இடம்பெற்றுள்ளன.
கோவிட் தொற்றாளர் என்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நிலை இதுவரை அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்படவில்லை. அதனால், இது தொடர்பாக வீணாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டல்களை பேணி வந்தால், இவ்வாறான நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்" என்றார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri
