இலங்கை இளநீரை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் மிக அதிக தேவை உருவாகி வருவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சந்தையில், தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக விற்கப்படுகிறது.
மேலும் ஒரு லீட்டர் தேங்காய் தண்ணீர் கொண்ட ஒரு பொதி வெளிநாட்டு சந்தையில் 4-5 அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படுகிறது.
இலங்கையில் இளநீரை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை வெற்றிகரமாக நடந்து வருகிறது. ஆனால் தேங்காய் தண்ணீரை பொதி செய்து விற்பதில் கவனம் செலுத்துவதில்லை.
கொப்பரை உற்பத்தி தொழில்
நாட்டின் மொத்த தேங்காய் உற்பத்தியில், உள்நாட்டு நுகர்வு தவிர, பெரும்பாலான தேங்காய்கள் கொப்பரை உற்பத்தித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
அதிக அளவு தேங்காய் தண்ணீர் வீணாகிறது என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
எனவே பயன்படுத்தாமல் தூக்கி எறியப்படும் தேங்காய் நீரை பொதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்ட வாய்ப்பு உள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிடுகிறது.

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
