இலங்கையில் அதிகரிக்கும் முதலீடுகள்
இந்த ஆண்டுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற முதலீட்டு இலக்கை முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை (Board of Investment of Sri Lanka) எட்டியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதலீட்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ள முதலீட்டாளர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்படி, அதானி (Adani) நிறுவனம் மட்டுமே 820 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளதாக அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய வர்த்தக நிறுவனங்கள்
மேலும், ஏனைய வர்த்தக நிறுவனங்களுடன் 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |