ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று டுபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 23 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
இறுதிப் போட்டியில் அபார வெற்றியை ஈட்டி இலங்கை அணி நாட்டின் நற்பெயரை மீண்டும் சர்வதேசத்தில் உயர்த்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புகழாரம்

தலைமைத்துவம் மற்றும் அணியின் ஏனைய வீரர்களின் எல்லையில்லா அர்ப்பணிப்பு என்பனவே இந்த அனைத்து வெற்றிகளுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த வெற்றிக்காக உழைத்த பயிற்றுவிப்பாளர்கள், முகாமைத்துவம் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையிலும், அனைவரும் வெற்றியை நோக்கி செய்த பொதுவான அர்ப்பணிப்பு கிரிக்கெட் உலகிற்கு மட்டுமன்றி ஏனைய துறைகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த அபார வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் இருதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
நான் சிவனேனு தானடா இருந்தேன்: நயன்தாரா 'நார்மல் people கிடையாது' ட்ரோல் பற்றி விக்னேஷ் சிவன் விளக்கம் Cineulagam
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri