இலங்கை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள்(photos)
இலங்கை தீவுக்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் தீவைச் சுற்றியுள்ள கரையோர மற்றும் கடற்பரப்புகளில் வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையானது நேற்றைய தினம் (15.04.2023 ) இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் நேற்று (15.04.2023) தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதன் போது இந்திய கப்பல் ஒன்று சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
கடற்படையினரால் கைது நடவடிக்கை
இதேவேளை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த கப்பலை தடுத்து நிறுத்தி பெருமளவிலான கஞ்சா மீட்டுள்ளதுடன் சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதற்கமைய கடற்படையினர் 23 பொதிகளில் இருந்து 62 கிலோ 400 கிராம் எடையுள்ள கேரள கஞ்சாவை மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 20 மில்லியன் ரூபாய் எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேகநபர் மூவரையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

ஈரான் விடுத்த மிரட்டல்... கத்தார் தளத்தில் இருந்து மொத்த போர் விமானங்களையும் வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
