ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.!
ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் குருகுல சனசமூக நிலையத்தில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் இன்றையதினம்(14) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனால் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு கூறப்பட்டது.
யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை! 17 வருடங்களின் பின்னர் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை..
விசேட கலந்துரையாடல்
அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால பயணங்கள் மற்றும் மற்றும் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர் அணி என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
என் சாவுக்கு நீ தான் காரணம்.. விவாகரத்து வேண்டும்.. சரவணன் கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ Cineulagam