அத்தியாவசிய சேவையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி
பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது அரசாங்கம் வழங்கும் அத்தியாவசிய பொதுச் சேவைகளின் அவசியத்தை கருத்தில் கொண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு இலக்கம் 61ஆம் இலக்க பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்த நேற்று முன் தினம் (03.12.2022) வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொது சேவைகள்
அதன்படி மின்சார விநியோகம், பெட்ரோலிய பொருட்கள் விநியோகம் மற்றும் எரிபொருள் ஆகியவை அத்தியாவசிய பொது சேவைகளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளுக்கு பராமரிப்பு, வரவேற்பு, கவனிப்பு உணவு, சிகிச்சை தொடர்பாக செய்ய வேண்டிய அனைத்து சேவை, வேலை, உழைப்பு என்பனவும் இந்த வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன.




விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 18 மணி நேரம் முன்

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam
