இஸ்லாமிய புதுவருட தினத்தை முன்னிட்டு கல்முனையில் விஷேட நிகழ்வு
இஸ்லாமிய புதுவருட தினத்தை (முஹர்ரம்) முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு அம்பாறை கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா(நழீமி) சிறப்புரை ஆற்றியுள்ளார்.
இனிப்பு வழங்கல்
நிகழ்வின் இறுதியில் பாடசாலையின் ஆசிரியை சுசான் பாயிஸினால் வழங்கப்பட்ட இனிப்பும் பிரதம அதிதியால் சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், உதவி அதிபர் எம்.
ஏ. பாதிம் மிஸ்னா, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை
அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |