இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசேட கலந்துரையாடல்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சியிலுள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்றது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு 2025-2029ஆம் ஆண்டுக்கான தேசிய ஊழல் ஒழிப்பு திட்டத்தை தயாரிப்பதற்கான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை உள்வாங்கும் விதமான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன் கலந்து கொண்டார்.
மேலும், கலந்துரையாடலில் மதகுருமார்கள், திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சுகாதார துறைசார்ந்தவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |