இந்தியப் பிரஜைகள் இலங்கை வருவது குறித்த விசேட அறிவிப்பு
இலங்கை வீசாக்கள் உடைய இந்திய பிரஜைகள் நாட்டுக்குள் வருவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
செல்லுபடியாகும் இலங்கை விசாக்கள் உடைய இந்தியப் பிரஜைகள் சில நிபந்தனைகளுடன் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை என்பனவற்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அறிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் இந்தியப் பிரஜைகள் சுகாதார அமைச்சின் dghs@health.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதன் பிரதியை quarantinelk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.
விசா பிரதியை சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவை அதிகாரசபை என்பனவற்றின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்திய நிபுணர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நிறுவனங்களும் இதே அணுகுமுறையை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளது.
இலங்கை வாழ்க்கைத் துணையைக் கொண்ட இந்தியப் பிரஜைகள் அருகாமையில் இருக்கும் இலங்கை உயர்ஸ்தானிகரம் அல்லது கொன்சோல் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டு தேவையான அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.