லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு
டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வீட்டு பாவனை மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை வழமைப்போல விநியோகிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சில பகுதிகளில் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், தற்போது நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து கண்காணிப்புக்கள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.