லாஃப் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்யும் வகையில் லாஃப் நிறுவனம் தனது விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த சில வாரங்களாக போதியளவு எரிவாயு கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டிலுள்ள விநியோக வலையமைப்பு மற்றும் விநியோக வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வினைத்திறனுடன் நிரப்பி கொள்வனவு செய்வதற்கு நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

லாஃப் எரிவாயு தட்டுப்பாடு
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு நிறுவனத்திடம் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும், வணிக மற்றும் உற்பத்திகளுக்கான எரிவாயு வெளியீடு தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, லாஃப் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் அச்சப்பட வேண்டாம் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், லாஃப் எரிவாயு தனது வாடிக்கையாளர்களுக்கு 1345 என்ற நேரடித் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கு அருகில் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் விநியோகஸ்தரை கண்டறியுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
மீண்டும் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாக போகும் ஹிந்தி டப்பிங் சீரியல்கள்... எந்த டிவி தெரியுமா? Cineulagam
சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam