எதிர்காலம் மிகவும் ஆபத்தானது! எச்சரிக்கும் சபாநாயகர்
நாட்டின் எதிர்காலம் மிகவும் ஆபத்தானது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலி - அபரகட பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நெருக்கடி நிலைமைகள் தீவிரமடையும்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் அழுத்தங்கள் தற்காலிகமாக குறைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இதனை விடவும் நெருக்கடி நிலைமைகள் ஏற்படும்.

கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகினால் பௌத்த மகா சங்கத்தினராலோ அல்லது ஆட்சியாளர்களினாலோ ஒன்றும் செய்ய முடியாத நிலைமை உருவாகும். அவ்வாறான ஓர் நிலைமை ஏற்படுவதனை தவிர்ப்பது அனைவரினதும் கடமையாகும்.
தற்காலிகமாக வெளிப்படாதிருக்கும் நிலைமை
நாட்டின் ஆட்சியாளர், ஆட்சியை கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல நேரிட்டதன் மூலம் நாட்டில் எவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.
நாட்டில் அந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது. தற்காலிகமாக அது வெளிப்படாதிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின்சாரக் கட்டணம் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், விகாரைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri