தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்ற மகன் கைது
தனது தந்தையின் ஓய்வூதியத்தை முறைகேடாகப் பெற்று வந்த நபரொருவரை பாணந்துறைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள நில அளவையாளர் திணைக்களத்தில் பணியாற்றிய நபரொருவர், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் மரணித்துள்ளார்.
மகன் கைது
அவருக்கு உரித்தான ஓய்வூதியம், அவரது மரணத்தின் பின் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மரணித்தவரின் மகன், தன் தாயுடன் சேர்ந்து (மரணித்தவரின் மனைவி) இணைந்த வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பித்து தந்தையின் ஓய்வூதியத்தை அந்த வங்கிக் கணக்கின் ஊடாகப்பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே மரணித்தவரின் மனைவியும் இறந்து தற்போதைக்கு ஒன்றரை வருடங்கள் கடந்துவிட்டநிலையில், அவரது மகன் தொடர்ந்தும் தந்தையின் ஓய்வூதியப் பணத்தை முறைகேடாகப் பெற்று வந்துள்ளார்.
இதுதொடர்பில் பாணந்துறை பிரதேச செயலகத்தில் இருந்து கிடைத்த முறைப்பாட்டைஅடுத்து சந்தேக நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan