சமூக விஞ்ஞான போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மெரயா பாடசாலை
மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் மத்/ நு / லிந்துலை மெரயா பாடசாலையில் 5 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட தமிழ் தின போட்டியில் மெரயா தமிழ் மகா வித்தியாலத்தில் சமூக விஞ்ஞான போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு 5 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த போட்டியில் பங்கு பற்றிய ஐந்து மாணவர்களில் ஒன்பதாம் வகுப்பை சேர்ந்த திவ்யலோஜினி மற்றும் எட்டாம் வகுப்பை சேர்ந்த ஜொஹானா குரே ஆகிய மாணவர்கள் முதலாம் இடத்தையும் பத்தாம் வகுப்பை சேர்ந்த கவிஷாலினி இரண்டாம் இடத்தையும் பத்தாம் வகுப்பை சேர்ந்த ஹன்சிகா மற்றும் எட்டாம் வகுப்பை சேர்ந்த கிருஸ்டினா முறையே மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாணவர்களின் திறமையை பலறும் பாராட்டி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |