ஜனாதிபதி ரணிலுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளதா..! புது வியூகம் அமைக்கும் புலனாய்வு துறை(Video)
தற்போதைய நிலைமைகளில் வெளி சக்திகள் இல்லாமல் ஏதாவது ஒரு உள்ளூர் சக்திகளால் ஜனாதிபதி ரணிலுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக நாங்கள் பார்க்கின்றோம் என இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“இந்தியாவிற்கு ரணில் விரோதமாக இருப்பதாக இந்தியா கூறுகின்றது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அப்போதைய அரசாங்கத்திற்கு இந்தியா பலமுறை பல கோணங்களில் அறிவுறுத்தல் கொடுத்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் தான் ஸ்னைப்பர் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி குண்டு தாக்குதல் என்பன முதன் முதலில் இலங்கைக்குள் அரங்கேறியது.
இந்த ஸ்னைப்பர் குண்டு தாக்குதல், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமருக்கு நடந்திருந்தது.
இந்நிலையில் அப்படியான ஒரு தாக்குதல் ரணிலுக்கு நடக்க வாய்ப்பு இருப்பதாக தற்போது அரசாங்கம் சொல்கின்றது.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |