இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக செய்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் : முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள்
கிளிநொச்சி(Kilinochchi) இரணைமடுக் குளத்தின் கீழான 2024 சிறுபோக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மாவட்ட செயலகத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணை மடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் குறிப்பிட்ட சில விவசாய அமைப்புகள் ஒதுக்கீட்டு பிரதேசத்துக்கு மேலதிகமாக பயிர்செய்கை மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து கடந்த 23ஆம் திகதி மாவட்ட அரச அதிபருக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளால் மனு ஒன்று கையளிக்கப்பட்டிருந்தது.
கள ஆய்வுகள்
இதனை அடுத்து மாவட்ட விவசாய திணைக்களம் மற்றும் மாவட்ட பதில் அரச அதிபர் உள்ளிட்வர்களை கொண்டு மாவட்ட அரச அதிபரால் அதற்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் மேலதிக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் கடந்த செவ்வாய்கிழமை முதல் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி புலிங்க தேவன்முறிப்பு சின்னக்காடு உள்ளிட்ட குறித்த பிரதேசங்களில் பயிர்செய்கை கூட்டத்தினை மீறி அதிகளவான ஏக்கர் நிலப்பரப்பு பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டாவளை மற்றும் கிளிநொச்சி கமநல சேவைத் திணைக்களங்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது இரணை மடுக்குளத்தினுடைய முழுமையான நீர்மட்டம் 36 அடியாகும் பெரும் போகம் நிறைவு பெற்றதையடுத்து 2024ஆம் ஆண்டுக்கான சிறுபோக குழு கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதன் போது குளத்தின் நீர்மட்டம் 35 அடி ஒரு அங்குலமாக காணப்பட்டது.
இதன்படி நீரின் அளவை வைத்து இருபதாயிரம் ஏக்கரிலும் நூறுவீதமான நெற்செய்கை முன்னெடுக்க முடியும் என விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்ட போதும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளும் தொடர்ச்சியாக பங்கு மோசடிகளில் ஈடுபடுபவர்களும் இணைந்து அதன்அளவை மட்டுப்படுத்தி 15750 ஏக்கராக தீர்மாணித்து விட்டு மேற்குறித்த அமைப்புகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுகளை விட மேலதிகமான பயிர்செய்கைகளை மேற்கொண்டுள்ளன.
அரசியல் தலையீடு
ஆனாலும் இரணைமடு குளத்தின் கீழ் குளத்தின் கீழ் உள்வாங்கப்படாத மானாவாரி பிரதேசங்களாக காணப்படுகின்ற கோரக்கண்கட்டு பகுதி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கான பங்குரிமைகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் அதற்கான அனுமதிகளை வழங்காது ஒரு சில அமைப்புகள் மாத்திரமே தன்னிச்சையான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடி தொடர்பாகவும் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாகவும் மாவட்ட மாவட்ட உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் முயற்சித்த போதும் ஒரு கட்சி சார்ந்த அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகளுக்கு அழுத்தம் காரணமாக அச்செயற்பாடுகள் கைவிடப்பட்டன.
இவ்வாறான செயற்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம், இறந்த 2வது கணவர்.. பூவே உனக்காக பட நடிகையின் சோக வாழ்க்கை Cineulagam

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
