ஹொரவ்பொத்தானை பிரதேச சபை மொட்டு கட்சி வேட்பாளர் முதல் இடத்தில்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தின் றத்மலை கிராமத்தில், பொதுஜன பெரமுன கட்சி அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டு கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய ஏ.ஆர்.எம்.லரீப் றத்மலை கிராமத்தை முன்னிலைப்படுத்தி 284 வாக்குகளை பெற்றுள்ளார்.
வாக்குகள்
சமூக செயற்பாட்டாளர் ஏ.ஆர்.எம்.பாஹீம் மற்றும் அவரது செயலாளர் டி.எம்.றினாஸ் தலைமையில் இவர் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் இதுவரை காலமும் பொதுஜன பெரமுன கட்சி குறித்த கிராமத்தில் குறைந்த அளவிலேயே வாக்குகளைப் பெற்றதாகவும் இம்முறை அதிகளவிலான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம், மற்றும் சிங்கள மக்கள் வாழும் கிராமத்தில் வரலாற்றில் முதல் தடவையாக அதிக வாக்குகள் பெற்றுக் கொண்டமை மகிந்த ராஜபக்சவிற்கு செய்த நன்றிக்கடன் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
