மொட்டுக்குள் பெரும் பிளவு - ரணிலுடன் இணையவுள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 பேர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபைக் கூட்டத்தின் பின்னர் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணிலுக்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள பின்னணியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் சபை கூட்டத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என யோசனை தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் அடங்கிய குழுவொன்று ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கட்சியின் கொள்கையை மீறி ஜனாதிபதி ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan