துருக்கிக்கு மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்களை அனுப்பி வைக்க இலங்கை திட்டம்
நில அதிர்வினால் பேரழிவினை சந்தித்துள்ள துருக்கிக்கு இராணுவ மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரை அனுப்பி வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதாபிமான பணிகளில் பயிற்றப்பட்ட இராணுவத்தினர் இந்த பணிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
பிரதமர் அலுவலகம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
விசேட கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய துருக்கிக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் நேற்றைய தினம் விசேட கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
துருக்கிக்கு உதவும் விசேட குழுவிற்கு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவிற்கு உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 12 மணி நேரம் முன்

ஞானத்தை ஜெயிலுக்கு போக வைத்துவிட்டு குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
