ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள்: ஒரு சிசு மரணம்
கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் நேற்றையதினம் தாயொருவருக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இன்று(18) உயிரிழந்துள்ளது.
குழந்தையின் நுரையீரலில் ரத்தம் பாய்ந்ததால் இந்த மரணம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தை மரணம்
பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகமை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்றையதினம் இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன.
400 தொடக்கம் 700 கிராம் வரை எடை கொண்ட இந்த குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையிலேயே குறித்த ஒரு குழந்தை இன்று உயிரிழந்துள்ளது.
மேலும், இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan