ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான வாக்கெடுப்பிற்கு வழிகோறுமாறு சிறீதரன் கோரிக்கை (Photo)

Parliament of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples United States of America
By Theepan Jul 18, 2022 08:45 AM GMT
Report

தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு சுதந்திரமான பொதுவாக்கெடுப்பு ஒன்றே பொருத்தமானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

கடந்த 12ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மற்றும் அரச சட்டசபை உறுப்பினர்களையும், மாநிலத் திணைக்கள அதிகாரிகளையும் வோசிங்டனில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பல்லாயிரக்கணக்கான மக்களின் இறப்பிற்கு வழிவகுத்த 30 ஆண்டுகால இனவிடுதலைப் போர் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் அப்போருக்கான அடித்தளமாக இருந்த ஈழத்தமிழ் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

காலம்காலமாக இலங்கை அரசியல் அதிகாரபீடங்களுக்கு வந்த அனைத்து சிங்கள தலைமைத்துவங்களும் தமது அரசியல் கட்சிகள் எவையாயினும், எப்போதுமே தமிழர்களுக்கெதிராகவே செயற்பட்டிருந்ததோடு அவர்களில் ஒரு சிங்களத் தலைவரேனும் தமிழர்களுக்கு முழு உரிமைகளையும் வழங்க முன்வந்திருக்கவில்லை.

ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பாக...!

அதனடிப்படையில் இலங்கையின் தற்போதைய வளர்ச்சி நிலையில், அப்பிராந்தியத்திற்கு அமைதியையும் திடத்தன்மையையும் கொண்டுவரக் கூடியதொரு பொதுவாக்கெடுப்பினை ஜனநாயகரீதியாகவும் அமைதியாகவும் நடத்துவதன் மூலம், தமிழர்கள் ஒரு பூர்வீக தேசிய இனத்தவர்கள் என்ற அங்கீகாரத்தோடு, வடக்கு, கிழக்குப் பிராந்தியங்கள் தமிழர்களின் மரபுவழித் தாயகம் என்ற அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வைப் பெற்றுத்தருவதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்குமாறு அமெரிக்காவிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்புக்காக குரல்கொடுத்துவரும் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான வாக்கெடுப்பிற்கு வழிகோறுமாறு சிறீதரன் கோரிக்கை (Photo) | Sivagnanam Siritharan Requests

 நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கோரிக்கைகள் 

1. 1948இற்கு முன்பிருந்தே இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்துவரும் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களது வழித்தோன்றல்களுக்காகவும், தமது தாய்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்களிடையே ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் தமது சுதந்திரத்தினைத் தீர்மானிப்பதற்காக, சர்வதேச சமூகத்தினால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான பொதுவாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது.

2. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தி இனப்படுகொலை, மனித குலத்திற்கெதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், பகைமை மற்றும் பிரிவினைவாதக் குற்றங்களுக்கெதிராக விசாரணைசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனப்படுகொலைக் குற்றத் தடுப்பு மற்றும் தண்டனைக்கான தீர்மானத்தின்கீழும் சித்திரவதைக்கெதிரான தீர்மானத்தின்கீழும் பகைமை மற்றும் பிரிவினைவாதக் குற்றங்களின்கீழும் சர்வதேச நீதிக்கான நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையை நிறுத்தி அதற்கெதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது.

3. இப்பொதுவாக்கெடுப்பு நடாத்தப்படும்வரையில் நாட்டின் வடக்கு-கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஈழத்தமிழர்களை ஆட்சிசெய்யவும் அவர்களையும் அவர்களது நிலங்களையும் பாதுகாப்பதற்குமாக ஓர் இடைக்கால சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது.

4. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, பாரிஸ் கிளப், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து இலங்கை பொருளாதார உதவியினை கோரும் வேளையில், நிபந்தனைகளற்று எந்தவொரு உதவியும் வழங்கப்படக்கூடாதென தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்திற்கான இலங்கையின் முதன்மையான பொறுப்புக்களையும் இலங்கையின் ஏமாற்று வடிவங்களையும் சர்வதேச சமூகமானது விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான வாக்கெடுப்பிற்கு வழிகோறுமாறு சிறீதரன் கோரிக்கை (Photo) | Sivagnanam Siritharan Requests

இலங்கைக்கான உதவிகள் எவையேனும் வழங்கப்படும்போது பின்வரும் நிபந்தனைகளை விதிக்கப்பட வேண்டும்

அ. இலங்கையானது நிறைவேற்றப்படாத அனைத்து தீர்மானங்களையும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

ஆ. மீண்டும் இடம்பெறாதென்ற உத்தரவாதமாக, இலங்கை, ரோமானிய சட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு இனவிடுதலைப்போரின்போது தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துக் குற்றங்களுக்குமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படுவதற்கும் சம்மதிக்கவேண்டும்.

இ. தமிழர் பிராந்தியத்திலிருந்து இலங்கை இராணுவத்தினை அகற்றுதல் மற்றும் போருக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்த இலங்கை இராணுவத்தின் அளவிற்கு இராணுவப் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது.

ஈ. இடைக்கால சர்வதேசப் பாதுகாப்புப் பொறிமுறையினையும் ஈழத்தமிழர்களுக்காக சுதந்திரமான பொதுவாக்கெடுப்பினையும் ஏற்றுக்கொள்வது.

என்பவை உள்ளிட்ட பல முக்கியவிடயங்கள் மேற்படி கலந்துரையாடலின் போது, பா.உ சிவஞானம் சிறீதரன் அவர்களால் அமெரிக்க இராஜதந்திர குழுவினருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US