75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள்: ஜி.ஸ்ரீநேசன் சீற்றம்
தமிழர்களின் 50 சத வீதமான பிரச்சினைகளைத் தீர்த்து விட்டதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தவறான கருத்தினை வெளியிட்டுள்ளார் என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் தலைவர் ஸரீபன் கூப்பரை லண்டனில் சந்தித்தபோது இந்த தவறான கருத்தினை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் ஜி. ஸ்ரீநேசன் கூறியுள்ளதாவது, இறுதி யுத்தம் 2009 மே மாதத்தில் நிறைவடைந்தது.இந்த இறுதி யுத்த காலத்தில், தமிழ் மக்கள் மீது பாரிய அராஜக வன்மங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
வடக்கு கிழக்கில் காணி அபகரிப்புகள்
பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் இருந்தார்கள். இவ்விடயம் தொடர்பாக உண்மைகள் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. நல்லிணக்க சூழல் உருவாக்கப்படவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகள் தொடர்பாக நீதி கிடைக்கவில்லை. பாரிய குற்றமிழைத்த குற்றவாளிகள் கண்டறியப்படப்படவில்லை, அவர்கள் தண்டிக்கப்படவில்லை.
தமிழ் அரசியல் கைதிகள் இப்போதும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் காணி அபகரிப்புகள் நிறுத்தப்படவில்லை. தமிழர்களின் கலாசார அடையாள அழிப்புகள் நிறுத்தப்படவில்லை .
தமிழர் தாயக பூமியில் சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவில்லை. வடக்கு கிழக்கில் இராணுவக் குவிப்புகள் நிறுத்தப்படவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடுகள் வழங்கப்படவில்லை.
நினைவேந்தல்
தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.13ஆவது யாப்புத்திருத்தம் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவில்லை, தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திய பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. ஊடக அடக்குமுறை, தமிழ் மக்கள் மீதான அடக்கு முறை நிறுத்தப்படவில்லை.
ஒன்றே ஒன்று மட்டும் தற்காலிகமாக நடந்திருக்கின்றது. மறைந்த தமிழ் உறவுகளை நினைவேந்துவதற்கு மட்டும் ஜனாதிபதி ரணில் இடமளித்துள்ளார். இப்படியாக எந்த பிரச்சினையும் தீர்க்கப்படாத நிலையில், 50 வீதமான தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக ஜனாதிபதி கூறியமை பொய்யாகவும் ஏமாற்று வித்தையாகவும் அமைந்துள்ளது.
தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தையே ஏமாற்றும் நிலையில், ஜனாதிபதியின் கருத்து அமைந்துள்ளது.
சிங்களத் தலைவர்கள்
75 ஆண்டுகளாகத் தமிழர்களை ஏமாற்றிய சிங்களத் தலைவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதுதான் உண்மை. ஆயின் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை, இயலுமை சிங்களத் தலைவர்களுக்கு இல்லை என்பதே 75 ஆண்டுக் காலப் படிப்பினையாகும்.
எனவே, ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வானது, இந்தியா உட்படச் சர்வதேச சமூகத்திடமே உள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சுயமரியாதையுடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான தீர்வு ஒன்றுதான் தமிழர்களின் தேவையாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
