பாதியிலேயே வெளியேறிய ஷுப்மன் கில்.. வைத்தியசாலையில் அனுமதி
இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில், கழுத்து பிடிப்பு (Neck Spasm) காரணமாக பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளாக நேற்று (15) இடம்பெற்றது.
இதன்போதே அவர் பாதியில் வெளியேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் கண்காணிப்பு
சௌரவ் ஹார்மர் வீசிய பந்தில் பவுண்டரி அடித்த பிறகு, சுப்மன் கில்லுக்கு திடீரென கழுத்து வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பரிசோதனைக்காக இரவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மன் கில்-க்கு கழுத்து பிடிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தங்களது மருத்துவக் குழுவால் அவர் கண்காணிக்கப்படுகிறார் எனவும் அவர் போட்டியில் கலந்துகொள்வது அவரது முன்னேற்றத்தைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 18 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam