கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டதால் மாணவன் எடுத்த விபரீத முடிவு! சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் அமரர் சுதாகரன் வர்ஷணனுடைய மரணத்திற்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் அமரர் சுதாகரன் வர்ஷணனுடைய தற்கொலை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு கடிதத்தை ஆளுநருக்கும், அரசாங்க அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.
2022.11.11 அன்று காலை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரினால் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி விஞ்ஞான உயர்தர பரீட்சை பகுப்பாய்வு கலந்துரையாடல் தொடர்பான கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு மாணவர்கள், பெற்றோருடன் கட்டாயப்படுத்தலுடன் சமூகமளிக்க வைக்கப்பட்டிருந்தனர். எனினும், அமரர் சுதாகரன் வர்ஷணன் சுயவிருப்பத்திற்கு முரணாக அழைக்கப்பட்டமையால் உயிரை மாய்ப்பதற்கு அலரிவிதைகள் உட்கொண்ட நிலையில் மன உளைச்சலுடன் மாணவன் பரீட்சை பகுப்பாய்வில் கலந்து கொண்ட நிலையில், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளரின் பகுப்பாய்வு கூட்டத்தில் மாணவன் வாந்தி எடுத்து மயக்க நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் மரணமடைந்தார்.
இங்கே ஒரு அப்பாவி மாணவன் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. எனினும் இதற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.