அமெரிக்க தனியார் கல்லூரியில் துப்பாக்கிச் சூடு: மாணவர் உட்பட 3 பேர் பலி - செய்திகளின் தொகுப்பு (Videos)
அமெரிக்கத் தனியார் கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா, விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் கல்லூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டார்.
இதில் படுகாயமடைந்த கல்லூரியின் வளாக பாதுகாப்பு அதிகாரிகளான ஜான் பெயிண்டர் மற்றும் ஜே.ஜே. ஜெபர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதனால், கல்லூரியில் பதற்றமான சூழல் நிலவியது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,