50 நாட்களாக எரிபொருளுடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்!
40,000 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல் இன்றுடன் (15ம் திகதி) ஐம்பது நாட்களாக விடுவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த எரிபொருள் தாங்கிய கப்பல் ஏப்ரல் 26ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பலை விடுவிப்பதற்கு தேவையான டொலர்கள் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் நங்கூரமிட தாமத கட்டணமாக நாளொன்றுக்கு 18,000 டொலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை விடுவித்திருக்க முடியும்
எரிபொருள் தாங்கி விடுவிக்கப்பட்டிருந்தால், நாட்டில் உள்ள ஆறு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது.
30,000 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் விடுவிக்கப்பட்டிருந்தால் யுகடனவி, சபுகஸ்கந்த 1 மற்றும் 2, கொலன்னாவ, மத்துகம மற்றும் துறைமுக மிதக்கும் தொகுதி மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை விடுவித்திருக்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், அந்த முடிவை எடுக்கத் தவறியதால், போக்குவரத்துக்கான 1500 மெட்ரிக் தொன் டீசலை யுகதானவி மின் உற்பத்தி நிலையத்திற்கு விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
