யாழில் 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் நேற்றிரவு (17.11.2022) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் ரீதியில் துன்புறுத்தல்
இல்லத்தில் காப்பாளராகப் பணியாற்றும் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மன்னாரைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின் சந்தேகநபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்
முற்படுத்தப்படவுள்ளார்.