புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அமர்வில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அமர்வு இன்று பிரதேச சபையின் தவிசாளர் அ.தவக்குமாரன் (A.Thavakumar) தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது பிரதேச சபைக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள பாரிய கல் உடைக்கும் ஆலையின் வருமாம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்த வேண்டும் என வட்டார உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதேச சபையின் வருமானம் அனைத்து பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் சமமாக பங்கீடு செய்வது என சபை உறுப்பினர்களால் வாத பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுசுட்டான் கல் உடைக்கும் ஆலையில் இருந்து வரும் பிரதேச சபைக்கு கிடைக்கும் வருமானம் பிரதேச அபிவிருத்திக்கு சபையின் சட்டத்திற்கு அமைய செயற்படுத்துவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.