மனித உரிமைகள் கண்காணிப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு (Video)
மனித உரிமைகள் காணிப்பு மற்றும் முன்னேற்றம் தொடர்பான பிரவேசம் என்னும் தலைப்பிலான செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் ஆகியவற்றின் அனுசரணையுடன் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் அமைப்பின் ஒழுங்கமைப்பில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.கேட்போர் கூடத்தில் இந்த செயமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வாக இது நடைபெற்றது.
சுதந்திர ஊடக இயக்கத்தின் பேர்னாட் எதிரிசிங்க, மாற்றுக்கொள்கைக்கான நிலையத்தின் பிரதீப், கிராமிய அபிவிருத்திதிட்டமிடல் அமைப்பின் இணைப்பாளர் வ.ரமேஸ் ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது செய்தி சேகரிப்பின்போது ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகள் குறித்து கருத்துகள் வழங்கப்பட்டன.